ஹிமாச்சலின் சம்பா மாவட்டத்தில் உள்ள பெய்லி பாலத்தை அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இன்று திறந்துவைத்தார்.
10 கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.50 கோடி செலவில் கட்டப்பட்ட 190 அடி நீளப் பாலத்தை ஒன்றரை மாதங்களில் கட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் தாக்கூர் சிங் பர்மோரி மற்றும் துணை ஆணையர் டி.சி.ராணா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் பாலம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் குறைவான நேரத்தில் பாலம் கட்டுமானப் பணிகளை முடித்த பொதுப்பணித்துறை மற்றும் பொறியாளர்களின் முயற்சியை முதல்வர் பாராட்டினார். பாலத்தை விரைவில் கட்டி முடிக்க சிறப்பு ஆர்வம் காட்டிய பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங்கையும் அவர் பாராட்டினார்.