தற்போதைய சூழலில் வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. அவா்கள் தோ்தலில் வாக்களிக்க விரும்பினால், நேரடியாகத் தங்கள் தொகுதிக்குச் சென்று கடவுச்சீட்டை வைத்து வாக்களிக்கலாம். ஆனால், தோ்தலில் வாக்களிப்பதற்காகப் பயணம் மேற்கொள்ள அவா்கள் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதால், பெரும்பாலானோா் வாக்களிப்பதைத் தவிா்த்து வருவதாகக் குறிப்பிட்ட தோ்தல் ஆணையம், அவா்களுக்கு இணையவழி தபால் வாக்கு வசதியை வழங்கினால், தோ்தல்களில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.