கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும்: ஜெய்ராம் ரமேஷ்
கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று அக்கட்யின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று அக்கட்யின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் 2024ஐ பார்க்க விரும்பவில்லை, ஆனால் நான் 2023 ஐ பார்ப்பேன், அது (கர்நாடகத்தில் வெற்றி) காங்கிரஸுக்கு ஒரு சூப்பர் பூஸ்டர் டோஸாக இருக்கும். தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்குச் செல்லும்போது இது காங்கிரஸை வலுப்படுத்தும்.
மேலும 2024 பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் கர்நாடகத்தின் முடிவுகள், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பேரவைத் தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாரத் ஜோடோ யாத்ரா காங்கிரஸை சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் புத்துயிர் அளித்தாலும், கர்நாடகத்தில் வெற்றி பெற்றால் அது தேர்தல் ரீதியாக புத்துயிர் அளிக்கும்.
கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் நல்லாட்சி பற்றி பாஜக பிரச்சாரம் செய்வதை மக்கள் பார்த்துள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாக மிகவும் வலுவான மின்னோட்டம் இருக்கிறது. தொங்கு சட்டப்பேரவை என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தெற்கில் பாஜக ஆட்சியில் உள்ள ஒரே மாநிலம் கர்நாடகம்.
கேரளம், தமிழ்நாடு அல்லது தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...