கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமருடன் வந்த அவரின் பாதுகாப்பு ஹெலிகாப்டர் மணலில் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.
ஹெலிகாப்டரை தரையிறக்கும் போது தரைத்தளம் கடினமாக இல்லாததால் மணல் பகுதியில் தரையிறக்கப்பட்டது. மணல் பகுதியில் ஹெலிகாப்டரை தரையிறக்கும் போது ஹெலிகாப்டர் பாரம் தாங்காமல் அதன் கீழ் பகுதி ஆழமாக சிக்கிக் கொண்டது.
பாதுகாப்பு ஹெலிகாப்டர் மணலில் சிக்கிக் கொண்டதால், தனி ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.