விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லியில் ரூ.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 6 பேர் கைது!

தில்லியில் இரண்டு வெவ்வேறு நடவடிக்கையில் ரூ.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மீட்டுள்ளது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :6 மே 2023, 12:16 pm

DIN

தில்லியில் இரண்டு வெவ்வேறு நடவடிக்கையில் ரூ.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு மீட்டுள்ளது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் லக்பத் சிங்(43), சுரேஷ்(24), பிரகாஷ் பூரி(39) இவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். உத்தரகண்டைச் சேர்ந்த தால் சந்த் (36), அசாமின் தஸ்லிமா பேகம் (38) மற்றும் தில்லியைச் சேர்ந்த ரவி பிரகாஷ்(34) என்று கண்டறிந்துள்ளனர். 

சர்வதேச சந்தையில் ரூ.85 கோடிக்கு மேல் மதிப்புள்ள 101.62 கிலோ அபின் மற்றும் 2 கிலோ ஹெராயின், ரூ.7.5 லட்சம் ஹவாலா பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.