மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் தேர்வு மையங்களைக் கொண்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒத்திவைப்பு

வன்முறை வெடித்த மணிப்பூர் மாநிலத்தில், தேர்வு மையங்களைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :6 மே 2023, 12:34 pm

DIN


இம்பால்: வன்முறை வெடித்த மணிப்பூர் மாநிலத்தில், தேர்வு மையங்களைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், மணிப்பூரில் நிலைமையை நேரில் ஆய்வு செய்து, இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மணிப்பூர் மாணவர்களுக்கு மட்டும் ஒத்திவைப்பது குறித்து எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் எழுதிய கடிதத்தை மேற்கோள்காட்டி, மணிப்பூரில் தேர்வு மையங்களைக் கொண்ட மாணவர்களுக்கு மட்டும் பிறகு ஒரு நாளில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புத் தொடர்பாக மாணவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் செல்லிடப்பேசியில் தானியங்கி தகவல் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நீட் தேர்வு

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 7) நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் 499 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வுக்கான நுழைவுச் சீட்டை பெற்றுள்ளனா். தமிழகத்தில் மட்டும் 1.50 லட்சம் போ் நீட் தோ்வு எழுதுவாா்கள் எனத் தெரிகிறது. அவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் மட்டும் 14,000 போ் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் தோ்வு நடைபெற உள்ளது. மே 7-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தோ்வு நடைபெறும் என்றும், தோ்வு மையங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.