காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சிறுவனின் அடிபட்ட காயத்திற்கு ஃபெவிகுயிக் தடவிய மருத்துவர்!

தெலங்கானாவில் சிறுவனின் தலையில் அடிபட்ட காயத்திற்கு தையல் போடாமல் ஃபெவிகுயிக் தடவிய மருத்துவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோப்புப்படம்

Published On :

தெலங்கானாவில் சிறுவனின் தலையில் அடிபட்ட காயத்திற்கு தையல் போடாமல் ஃபெவிகுயிக் தடவிய மருத்துவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கசுகூர் பகுதியைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணாவும், அவரது மனைவி சுனிதாவும் வெள்ளிக்கிழமை தங்கள் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்ள தங்கள் மகனுடன் வந்தனர். 

திருமண நிகழ்வின் போது மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வம்சி கிருஷ்ணாவின் 7 வயது மகன் பிரவீன் சௌத்ரி, தவறுதலாக கீழே விழுந்து காயமடைந்துள்ளான். அவனுக்கு இடது கண்ணுக்கு அருகில் காயம் ஏற்பட்டது.

வம்சி கிருஷ்ணா உடனடியாக சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர் குழந்தையின் காயத்திற்கு தையல் போடாமல் ஃபெவிகுயிக் தடவி சிகிச்சை அளித்தார். அந்த சிறுவன் வலியால் அழுதான்.

மருத்துவரின் செயலால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள்  சீல் வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.