கர்நாடக மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி கோவாவில் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மே 10(நாளை) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்களிக்கச் செல்ல ஏதுவாக தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கோவா முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து கோவா மாநில தொழில் சங்கத்தின் தலைவர் தாமோதர் கோச்சர் கூறுகையில்,
ஒவ்வொரு தேர்தலுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக மாறிவிட்டால் அது கோவாவின் தொழில்களை மிகவும் பாதிக்கும். இது முட்டாள்தனமான முடிவு, தேர்தல் ஆதாயங்களுக்காக தொழில்கள் பாதிப்பது நல்லதல்ல.
மாநில அரசின் இத்தகைய ஒருதலைபட்ச முடிவுகளுக்கு எதிராக சட்டப்பூர்வ தீர்வுகளைப் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


