மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவாவில் நாளை ஊதியத்துடன் விடுமுறை!

கர்நாடக மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி கோவாவில் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரமோத் சாவந்த்

Updated On :9 மே 2023, 10:25 am

கர்நாடக மாநிலத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி கோவாவில் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் மே 10(நாளை) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்களிக்கச் செல்ல ஏதுவாக தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வரின் இந்த அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். 

இதுகுறித்து கோவா மாநில தொழில் சங்கத்தின் தலைவர் தாமோதர் கோச்சர் கூறுகையில், 

ஒவ்வொரு தேர்தலுக்கும் இது ஒரு முன்னுதாரணமாக மாறிவிட்டால் அது கோவாவின் தொழில்களை மிகவும் பாதிக்கும். இது முட்டாள்தனமான முடிவு, தேர்தல் ஆதாயங்களுக்காக தொழில்கள் பாதிப்பது நல்லதல்ல.

மாநில அரசின் இத்தகைய ஒருதலைபட்ச முடிவுகளுக்கு எதிராக சட்டப்பூர்வ தீர்வுகளைப் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.