கால் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்லிடபேசி வெடித்ததில், இளைஞர் ஒருவர் சிறு காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.
ரயில்வே துறை ஒப்பந்த தொழிலாளியான ஹரிஸ் ரஹ்மான் (23) கோழிக்கோடு நகரில் உள்ள அலுவலகத்திற்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய செல்லிடபேசி எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததாக ரஹ்மான் கூறினார். மேலும், செல்லிடபேசி என் பாக்கெட்டில் இருந்து திடீரென்று வெடித்து கால்சட்டையில் தீப்பிடித்தது என்று அவர் கூறினார்.
ரஹ்மான் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஏப்ரல் 24 அன்று, திருச்சூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி, செல்லிடபேசி வெடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.