பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் மாதம் 21 முதல் 24 ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அரசுமுறைப் பயணமாக செல்லும் அவர், அமெரிக்காவின் நியூ யார்க், வாஷிங்டன், சிகாகோவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஜூன் 22 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசவுள்ளார். அப்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு, ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, நரேந்திர மோடியின் வாஷிங்டன் பயணம், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஆழமான மற்றும் நெருக்கமான உறவை உறுதிப்படுத்தும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.