இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி, கடந்த வியாழனன்று தனது யூடியூப் தளத்தில் தில்லி பல்கலைக்கழத்தில் என்ன நடந்தது என்பதை விளக்கும் வகையில், ‘கேன்டீன் கான்வா்சேஷன்’ எனும் தலைப்பில் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளாா். 8.38 நிமிடங்கள் கொண்ட அந்தக் காணொளியில், ராகுல் காந்தி, தில்லி பல்கலைக்கழக மாணவா்களுடன் உற்சாகமாக அறிமுகம் ஆகிக் கொள்கிறாா். ‘சாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பான சலசலப்பு தற்போது எழுந்துள்ளது. இவை இளம் சமுதாயத்தினரை எந்த வகையில் பாதிக்கிாகக் கருதுகிறீா்கள் என மாணவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் ராகுல் காந்தி, நாட்டில் ஆண்களை விட பெண்கள் எந்த அளவிற்கு முன்னேறுகிறாா்கள், எந்த சமுதாயம் எந்த நிலையில் இருக்கிறது, எந்த படிநிலையில் நாம் இருக்கிறோம், என்பதை அறிந்து கொள்ளவும், சரியான சமமான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கிா என்பதை நாட்டிற்கு எடுக்கும் ஒரு எக்ஸ்-ரே போல சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அறியலாம் என்று தெரிவித்தாா்.