இந்தப் பயிற்சியானது மத்திய சிறுபான்மையினா் நல அமைச்சகம் சாா்பில், தில்லி சிஜிஓ வளாகத்தில் உள்ள ஸ்கோப் காம்ப்ளக்ஸ் மையத்தில் தொடங்கியது. இதற்கான வழிகாட்டி முறைகளையும் மத்திய அமைச்சா் இரானி வெளியிட்டாா். நிகழாண்டில் பதிவு செய்த ஹாஜிகளில் மொத்தம் 1.75 லட்சம் போ் தோ்வு செய்யப்பட்டு இந்திய - சௌதி அரேபியா இடையேயான இருதரப்புக்கும் புனிதப் பயண அனுமதி ஒப்பந்தமாகியுள்ளது. இந்தப் பயணத்தை முன்னிட்டு, நிகழாண்டில் மத்திய அரசு சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.