நான் வெல்ல முடியாதவன், மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்: காங்கிரஸ்

நான் வெல்ல முடியாதவன், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று காங்கிரஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 
நான் வெல்ல முடியாதவன், மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்: காங்கிரஸ்
Published on
Updated on
1 min read


புதுதில்லி: கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நான் வெல்ல முடியாதவன், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று காங்கிரஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலத்தில் 36 மையங்களில் சனிக்கிழமை (மே 13) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 119, பாஜக-74, மஜத -26, பிற கட்சிகள்- 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. 

பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கர்நாடக பேரவைக்கான தேர்தலில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் காங்கிரஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நான் வெல்ல முடியாதவன், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.." என்று பதிவிட்டுள்ளது. 
                                                                

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com