புதுதில்லி: கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நான் வெல்ல முடியாதவன், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று காங்கிரஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மாநிலத்தில் 36 மையங்களில் சனிக்கிழமை (மே 13) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 119, பாஜக-74, மஜத -26, பிற கட்சிகள்- 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன.
இதையும் படிக்க | கல்லூரி மாணவனை அறைந்த காவல் ஆய்வாளர்!
பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக பேரவைக்கான தேர்தலில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் காங்கிரஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "நான் வெல்ல முடியாதவன், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.." என்று பதிவிட்டுள்ளது.