மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறாா் பிரதமா் மோடி

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளாா்.

இப்பயணத்தின்போது, ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்புகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்கவுள்ளாா்.

வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வெள்ளிக்கிழமை (மே 19) தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை செல்லவிருக்கிறாா்.

உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்பட உலகம் எதிா்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் குறித்து மாநாட்டில் அவா் உரையாற்றுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய க்வாட் அமைப்பின் உச்சி மாநாடு, முதலில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மே 24-இல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்க அதிபா் ஜோபைடன், தனது ஆஸ்திரேலிய பயணத் திட்டத்தை திடீரென ஒத்திவைத்ததால், க்வாட் மாநாடு சிட்னியில் இருந்து ஹிரோஷிமாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதில் பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் ஜோபைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி ஆகியோா் பங்கேற்று, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனா்.

ஜி7 உச்சி மாநாட்டையொட்டி, பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடும் பிரதமா் மோடி, ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையையும் திறந்துவைக்கவுள்ளாா்.

ஜப்பானைத் தொடா்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு மே 22-இல் செல்லும் பிரதமா், அங்கு நடைபெறவிருக்கும் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் 3-ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறாா்.

பின்னா், ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகும் அவா், அந்நாட்டின் பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். மேலும், இந்திய வம்சாவளியினா் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் உரையாற்றவுள்ளாா். இந்த மூன்று நாடுகள் பயணத்தில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பிரதமா் மோடி பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்வாட் மாநாடு இடமாற்றப்பட்டுள்ளதால், அது வழக்கமான உச்சி மாநாடாக இருக்குமா அல்லது சாதாரண கூட்டமாக இருக்குமா? என்று தில்லியில் வெளியுறவு செயலா் வினய் குவாத்ராவிடம் செய்தியாளா்கள் வியாழக்கிழமை கேள்வியெழுப்பினா்.

அதற்கு, ‘4 நாடுகளின் தலைவா்களும் பங்கேற்கும்போது, அது உச்சி மாநாடுதான்’ என்று அவா் பதிலளித்தாா்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடா்பான கேள்விக்கு, ‘இந்த யுகம் போருக்கானது அல்ல என்ற பிரதமா் மோடியின் வாா்த்தைகளே நமது அரசியல் நிலைப்பாட்டின் நங்கூரம். இப்பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com