நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜெய்ப்பூர்: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு

ஜெய்ப்பூரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான். 

News image

கோப்புப் படம்.

Updated On :20 மே 2023, 1:19 pm

DIN

ஜெய்ப்பூரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள போஜ்புரா கிராமத்தில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் 9 வயது சிறுவன் அக்ஷித் இன்று காலை 7 மணியளவில் எதிர்பாராத வகையில் விழந்துள்ளான்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 7 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அக்ஷித்தை இரும்பு வலையின் உதவியுடன் வெளியே எடுத்தனர்.

பின்னர் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிறுவனின் உடல்நிலை ஆபத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் போஜ்புரா கிராமத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.