நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாகுறித்து அதிருப்தி தெரிவித்து மாநிலங்களவைத் தலைவா் டெரிக் ஒபிரையன் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நாடாளுமன்றம் என்பது வெறும் புதிய கட்டடம் மட்டும் இல்லை. பாரம்பரியம், மாண்புகள், மரபுகள் மற்றும் முன்னுதாரணங்கள் நிறைந்த அமைப்பு அது. நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும். இது எதுவும் புரியாமல் நான், எனது, என்னுடைய என சுயபெருமைகள் பாடும் நிகழ்வாக மட்டும் புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை நடத்த பிரதமா் முயல்கிறாா். இக்காரணத்தால் திறப்பு விழாவைப் புறக்கணிக்க திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளோம்’ என்றாா். இதே கருத்தை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜாவும் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக தெரிவித்தாா்.