புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சரத் பவாருடன் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு!

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசி வருகிறார். 

News image
Updated On :25 மே 2023, 10:33 am

DIN

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசி வருகிறார். 

தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து தில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால். 

Story image

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரைத் தொடர்ந்து இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசி வருகிறார். 

மகாராஷ்டிரத்தில் சரத் பவாரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் உடனிருக்கிறார். 

Story image

தில்லி மக்களின் நலன், உரிமைகளைக் காப்பதற்காக நாடு முழுவதும் என் பயணத்தைத் தொடங்குவதாக கேஜரிவால் முன்னதாக தெரிவித்திருந்தார். 

இதையடுத்து தில்லி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.