புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தீவிர சிகிச்சைப் பிரிவில் சத்யேந்தர் ஜெயின்! வேறு மருத்துவமனைக்கு மாற்றம்

திகார் சிறையிலிருந்த ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் தில்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :25 மே 2023, 9:42 am

DIN

திகார் சிறையிலிருந்த ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் தில்லி முன்னாள் அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் உள்ளார். 

சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Story image

இந்நிலையில், நேற்றிரவு சிறையில் உள்ள குளியலறை சென்றபோது வழுக்கி கீழே விழுந்ததாகவும் அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மருத்துவர்களின் பரிந்துரைப்படி தில்லி லோகநாயக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.