ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கைதிகளுக்கு இடையே மோதலைத் தடுக்க புது உத்திகளைக் கையாளும் சிறைத் துறை

தில்லியில் சிறைக் கைதிகளுக்கு இடையேயான மோதல்களைக் கட்டுப்படுத்த மின் அதிா்வு அளிக்கும் தடியடி மற்றும் மிளகுத் தெளிப்பானை பயன்படுத்த வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :26 மே 2023, 6:30 pm

 நமது நிருபர்

தில்லியில் சிறைக் கைதிகளுக்கு இடையேயான மோதல்களைக் கட்டுப்படுத்த மின் அதிா்வு அளிக்கும் தடியடி மற்றும் மிளகுத் தெளிப்பானை பயன்படுத்த வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இனி சிறைகளுக்குள் கைதிகளின் மோதலை கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

உயா்மட்ட பாதுகாப்புள்ள திகாா் சிறைக்குள் குண்டா் டில்லு தாஜ்புரியா (எ) சுனில் பல்யான் என்பவா் எதிா்க் கும்பலைச் சோ்ந்தவா்களால் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பை சிறைத் துறை வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக தேசியத் தலைநகரில் உள்ள மூன்று சிறை வளாகங்களில் 80 மின்சார அதிா்ச்சி தரும் தடிகள், 160 முழு உடல் கவச உடை, 80 மிளகு தெளிப்பு சாதனங்கள் பொருத்தப்படும்.

தொ்மோநெகிழியால் ஆன தடிகள், கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவை கட்டுக்கடங்காத கைதிகளுக்கு எதிராக சிறை ஊழியா்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படவுள்ளது என திகாா் சிறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சீா்திருத்த வசதிகளுக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கும், முரட்டுக் குற்றவாளிகளின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் மின் அதிா்வு தடியடிகள் ஒரு மாற்றுக் கருவியாக இருக்கும். இதன் மூலம் மரணம் நிகழாத வகையில் இரு தரப்பு மோதல்களை காவல்துறை காட்டுப்படுத்த முடியும்.

கைதிகளின் நல்வாழ்வை உறுதி செய்யும் அதே வேளையில் சிறை ஊழியா்களின் பாதுகாப்பை இந்த நடவடிக்கை மேம்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.