மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

லக்னௌவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் அருகே ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர் கைது

முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

News image
கோப்புப் படம்.
Updated On :27 மே 2023, 1:25 pm

DIN

முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறக்கவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, ஹஸ்ரத்கஞ்ச் சந்திப்பில் உள்ள கஸ்மண்டா அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் வசிக்கும் இளைஞர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் நேற்றிரவு சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோனை பறக்கவிட்டார்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், அந்த இளைஞரை கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஹஸ்ரத்கஞ்ச் சந்திப்பில் வசிக்கும் அங்கித் சிங் என அடையாளம் காணப்பட்டார். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.