மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மத்திய பிரதேசம்: விமானப்படை ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

பிந்த் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

News image

கோப்புப் படம்.

Updated On :29 மே 2023, 7:41 am

பிந்த் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

மத்திய பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த நிலையில அந்த ஹெலிகாப்டர் திடீரென பிந்த் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவிக்கவே அப்பாச்சி ஹெலிகாப்டருக்கு உதவ மற்றொரு ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. எனினும் அனைத்து பணியாளர்களும் விமானமும் பாதுகாப்பாக உள்ளதாக விமானப் படை தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஹெலிகாப்டர் வயல்வெளியில் தரையிறக்கப்பட்டதை அறிந்த கிராமத்தினர் அதனைக் காண அப்பகுதியில் கூடினர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.