அமலாக்கத்துறை விசாரணைக்கு கேஜரிவால் ஆஜராகவில்லை!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று அமலாக்கத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
Updated on
1 min read

தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று அமலாக்கத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கலால் கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் தில்லி முதல்வர் கேஜரிவால் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதுகுறித்து அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ள கேஜரிவால், “அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் தெளிவில்லாமல் இருக்கிறது. 5 மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். விசாரணைக்கு ஆஜராக வேறு தேதி ஒதுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதே வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) முதல்வா் கேஜரிவாலை அழைத்து விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com