
மகாராஷ்டிரத்தில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்து தொழிற்சாலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று(சனிக்கிழமை) காலை 7 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் காயமடைந்த நிலையில் இதுவரை 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
இதையும் படிக்க | எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை
குறைந்த மின்னழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.