தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

வடகிழக்கு மாநிலங்களை தில்லியுடன் இணைத்தது பாஜக: மோடி

வடகிழக்கு மாநிலங்களை தில்லியுடன் இணைக்கும் பணிகளை செய்து முடித்தது பாஜகதான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :5 நவம்பர் 2023, 2:19 pm

DIN


வடகிழக்கு மாநிலங்களை தில்லியுடன் இணைக்கும் பணிகளை செய்து முடித்தது பாஜகதான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மிசோரம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மிசோரம் மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கலாசாரம் மற்றும் இயற்கை அழகைக் ஒருங்கே அமையக் கொண்டது மிசோரம். உலகளாவில சுற்றுலா தளமாக மாறும் தகுதி மிசோரம் மாநிலத்திற்கு உள்ளது. 

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால், அது வணிகம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் முதலீடு, தொழிற்சாலைகள், மற்றும் வருவாய் மற்றும் புதிய வாய்ப்புகளை அதிகரிக்க இயலும். கடந்தமுறை மிசோரம் மாநிலத்திற்கு வந்தபோது போக்குவரத்து மூலம் மாநிலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என வாக்குறுதி அளித்திருந்தேன். 

பாஜக தலைமையிலான அரசு அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளது. 2013 - 14ஆம் ஆண்டுகளில் 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் 16 ஆயிரம் கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.