கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு ராகுல், பிரியங்கா வேண்டுகோள்!

சத்தீஸ்கர், மிசோரம் பேரவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மக்களை வலியுறுத்தினர். 

News image
Updated On :7 நவம்பர் 2023, 6:28 am

சத்தீஸ்கர், மிசோரம் பேரவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மக்களை வலியுறுத்தினர். 

5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ள நிலையில், மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கும், சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கும் இன்று காலை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில், காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு ராகுல், பிரியங்கா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களின் எக்ஸ் பதிவில், 

நீங்கள் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது, சத்தீஸ்கரில் காங்கிரஸ் போன்ற நம்பகத்தன்மையுள்ள கட்சி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். 

விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நிலமற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம், 4,000 போனஸ் உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களை சத்தீஸ்கருக்கு காங்கிரஸ் வழங்கியுள்ளது. 

மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.