அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு ராகுல், பிரியங்கா வேண்டுகோள்!

சத்தீஸ்கர், மிசோரம் பேரவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மக்களை வலியுறுத்தினர். 

News image
Updated On :7 நவம்பர் 2023, 6:28 am

DIN

சத்தீஸ்கர், மிசோரம் பேரவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மக்களை வலியுறுத்தினர். 

5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் இம்மாதம் நடைபெற உள்ள நிலையில், மிசோரம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கும், சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கும் இன்று காலை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த நிலையில், காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு ராகுல், பிரியங்கா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களின் எக்ஸ் பதிவில், 

நீங்கள் உங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தும்போது, சத்தீஸ்கரில் காங்கிரஸ் போன்ற நம்பகத்தன்மையுள்ள கட்சி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். 

விவசாயிகளின் கடன் தள்ளுபடி, நிலமற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம், 4,000 போனஸ் உள்ளிட்ட பல்வேறு உத்தரவாதங்களை சத்தீஸ்கருக்கு காங்கிரஸ் வழங்கியுள்ளது. 

மக்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.