தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

பெண்களை அவமதிப்பதே பாஜகவினர் தான்: நிதீஷுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் பதிலடி

பெண்கள் குறித்து பலமுறை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வருபவர்கள் பாஜகவினர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறியுள்ளார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:48 am IST

நிதீஷ் குமார் மீது குற்றம் சாட்டும்போது, தங்கள் கட்சி தலைவர்கள் பற்றியும் பாஜக பேச வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ தெரிவித்துள்ளார். 

மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் கருத்துக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருவதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் பிரிவு) செய்தித் தொடர்பாளர் கிளைட் க்ராஸ்டோ இதுகுறித்து பேசியதாவது: “எந்தவொரு பெண்ணுக்கு எதிராகவும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்த யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ஒரே விஷயத்தில் இருவேறு நபர்களுக்கு, இருவேறு அளவுகோல்களை பயன்படுத்தக் கூடாது.

நிதீஷ் குமாரின் பேச்சு குறித்து அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார். ஆனால் பாஜகவினர் இதனைப் பெரிதுபடுத்தி பிரச்சினையாக்கி வருகின்றனர். பெண்களை அவமதிப்பதே பாஜகவினர்தான். அவர்கள் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி வந்துள்ளதுடன், பெண்களுக்கு எதிராக பலமுறை தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளனர். 

பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராகப் பேச பாஜகவுக்கு உரிமை இல்லை, ஏனெனில் பாஜக தலைவர்களுக்கு பெண்கள் மீது எப்போதும் மரியாதை இருந்ததில்லை” என்று தெரிவித்தார். 

முன்னதாக, நவம்பர் 7-ஆம் தேதி ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார், “பிகார் மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் முன்பு 4.3 சதவீதமாக இருந்தது, இப்போது 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று கடந்த ஆண்டு அறிக்கையைக் குறிப்பிட்டு பேசினார். மேலும், கருவுறாமல் இருப்பதற்கு படித்த பெண்களுக்கு தெரியும்” என்று அவர் பேசியது சர்ச்சையானது.

மக்கள்தொகை அதிகரித்து வருவது குறித்தும், பாலியல் கல்வி பற்றியும் நிதீஷ் குமார் பேசியது எதிர்க்கட்சியினரால் தவறாக மாற்றப்பட்டு விட்டதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.