27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பாலியல் கல்வி குறித்த நிதீஷ் குமாரின் பேச்சு தவறாக மாற்றப்பட்டுவிட்டது: தேஜஸ்வி யாதவ்

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பேச்சு எதிர்க்கட்சியினரால் தவறாக மாற்றப்பட்டுவிட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

News image
Updated On :9 நவம்பர் 2023, 11:16 am IST

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பேச்சு தவறாக மாற்றப்பட்டு விட்டதாக பிகார் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பேச்சுக்கு எதிர்க் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறியுள்ளார். 

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: “ஒரு விஷயத்தை வேறு அர்த்தத்தில் புரிந்துகொள்வது தவறு. முதல்வர் நிதீஷ் குமாரின் கருத்து பாலியல் கல்வி தொடர்பானது. பாலியல் கல்வி குறித்து விவாதிப்பதற்கே மக்கள் தயங்குகிறார்கள். பள்ளிகளில் இதுதொடர்பான விஷயங்கள் தற்போது கற்பிக்கப்படுகிறது. அறிவியல் மற்றும் உயிரியல் கற்பிக்கப்படுகிறது. 

மக்கள்தொகை அதிகரிப்பைத் தடுப்பதற்கு நடைமுறையில் என்ன செய்ய வேண்டும் என்று முதல்வர் கூறினார். இதை தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது. பாலியல் கல்வி தொடர்பானதாக கருதவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நவம்பர் 7-ஆம் தேதி ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார், “பிகார் மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் முன்பு 4.3 சதவீதமாக இருந்தது, இப்போது 2.9 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று கடந்த ஆண்டு அறிக்கையைக் குறிப்பிட்டு பேசினார். மேலும், கருவுறாமல் இருப்பதற்கு படித்த பெண்களுக்கு தெரியும்” என்று அவர் பேசியது சர்ச்சையானது. 

அதைத் தொடர்ந்து பாஜகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முதல்வர் நிதீஷ் குமாரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.