அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், 'கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் நாகோன் மாவட்டக் காவல்துறை சோதனைகள் நடத்தியது.
கெருக்காமுக் கிராமத்தில் நடத்திய சோதனையில் 464கிராம் ஹெராயின் பரிமுதம் செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சோதனையில் 1.92 லட்சம் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம், இரண்டு கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையைக் கொன்ற பெற்றோர் அசாமில் கைது!
மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார் முதலமைச்சர். சிறப்பாக பணியாற்றிய, மாநிலக் காவல்துறைக்குத் தன் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.