ம.பி.க்கு காங்கிரஸ் செய்தது என்ன? அமித் ஷா கேள்வி!

மத்தியப் பிரதேசத்திற்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என உள் துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். 
ம.பி.க்கு காங்கிரஸ் செய்தது என்ன? அமித் ஷா கேள்வி!
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்திற்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என உள் துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில்  நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்தியப் பிரதேசத்திற்கு காங்கிரஸ் கட்சி எந்த நல்லதையும் செய்யவில்லை. சோனியா - மன்மோகன் ஆட்சி 10 ஆண்டுகளுக்கு இருந்தது. அப்போது மத்தியப் பிரதேசத்திற்கு அவர்கள் ஒதுக்கிய நிதி எவ்வளவு? கடந்த 15 நாள்களாக இந்த கேள்வியை முன்வைக்கிறேன்.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்திடம் இதற்கு பதில் இல்லை. 2004 - 2014 காலகட்டத்தில் மத்தியப் பிரதேசத்துக்கு 2 லட்சம் கோடி காங்கிரஸ் ஒதுக்கியிருந்தது. 2014 -2023 வரை மத்தியப் பிரதேசத்துக்காக பாஜக 6.35 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இதுமட்டுமின்றி 5 லட்சம் கோடி நெடுஞ்சாலைக்காக ஒதுக்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி மெட்ரோ ரயில், ரயில் நிலைய மேம்பாடு, விமான நிலையங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை பாஜக கொண்டுவந்துள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com