எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்

ஜகார்த்தாவில் நடைபெற உள்ள ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

News image
Updated On :14 நவம்பர் 2023, 2:07 pm IST

ஜகார்த்தாவில் நடைபெறும் 10வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நவம்பர் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பையொட்டி, அதில் பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் ராஜ்நாத் சிங் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்த உள்ளார். இந்த அமர்வுகளின் போது, ​​பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் விவாதிப்பார்கள்.

ஏடிஎம்எம் பிளஸ்-இன் தலைவராக இருப்பதால் இந்தோனேசியா இக்கூட்டத்தை நடத்துகிறது. நவம்பர் 16-ம் தேதி நடைபெறும் இந்த சந்திப்பின்போது, ​​பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச உள்ளார். 

ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும், அந்த அமைப்பின் உறுப்பினரல்லாத உரையாடல் பங்கேற்பாளர்களுக்கும் இடையிலான ஒரு தளமாகும். ஆசியான் அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய பத்து நாடுகள் உறுப்பினராக உள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் உறுப்பினரல்லாமல் கூட்டத்தில் பங்கேற்று வருகின்றன. 

ஆசியான் பிளஸ் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2017-ஆம் ஆண்டு முதல், இதன் அமைச்சர்கள் ஆண்டுதோறும் சந்தித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.