தில்லி - தர்பங்கா விரைவு ரயிலில் தீ!

உத்தரப்பிரதேசம் வழியாக சென்ற தில்லி - தர்பங்கா விரைவு ரயிலில் 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தில்லி - தர்பங்கா விரைவு ரயிலில் தீ!
Updated on
1 min read

உத்தரப்பிரதேசம் வழியாக சென்ற தில்லி - தர்பங்கா விரைவு ரயிலில் 2 பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தர்பங்கா சிறப்பு ரயில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சராய் போபட் ரயில் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, எஸ்1 பெட்டியில் புகை வருவதைக் கண்ட ரயில் நிலைய அதிகாரி உடனடியாக ரயிலை நிறுத்தினார். 

பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டதால், இந்த தீ விபத்தில் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. 

உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com