கோட்டாவில் விமான நிலையம் இல்லாதது அதன் வளர்ச்சியை பாதிக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்

கல்வி மையமான கோட்டாவில் விமான நிலையம் இல்லாதது நகரத்தின் வளர்ச்சி திறனை பாதிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்தார்.
கோட்டாவில் விமான நிலையம் இல்லாதது அதன் வளர்ச்சியை பாதிக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்

புதுதில்லி: கல்வி மையமான கோட்டாவில் விமான நிலையம் இல்லாதது, நகரத்தின் வளர்ச்சி திறனை பாதிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்தார். இந்த நிலையில் மாநில அரசானது, நிலம் அடையாளம் கண்டறியப்பட்டு மத்திய அரசிடம் ஒப்படைத்து விட்டது. அதே வேளையில், மோடி அரசு தங்களுக்கு அநீதி இழைத்துள்ளது என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

கோட்டா மக்களின் புகார்களில் ஒன்றானது, நகரத்திற்கு விமான நிலையத்தை உருவாக்காததன் மூலம் மோடி அரசு அவர்களுக்கு அநீதி இழைத்து விட்டது என்று மக்கள் தெரிவித்ததாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் கோட்டாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக எம்.பி. கூட பிரதமரை செல்வாக்கு செலுத்துவதில் தோல்வியடைந்துள்ளார். அதே வேளையில், விமான நிலையம் இல்லாதது கோட்டாவின் வளர்ச்சி திறனை அதிகமாக பாதிக்கிறது.

நவம்பர் 25ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வரும் நிலையில் ஜெய்ராம் ரமேஷ் வருகை குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com