உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று (நவம்பர் 19) குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் வெற்றி பெறுவதற்கு இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “140 கோடி இந்திய மக்களும் இந்திய அணிக்கு ஆதரவாய் உள்ளார்கள். இந்தப் போட்டியில் மிகவும் நன்றாக ஆடி, விளையாட்டை மேம்படுத்துங்கள். இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா பங்கேற்ற எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாமல் தொடர்ந்து வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. மறுபுறம் 8-வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி.

1983 மற்றும் 2011 ஆகிய இருமுறை கோப்பை வென்ற இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேபோல ஆறாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியா இருக்கிறது. 

இந்த இரு அணிகளுக்கும் இடையில் மிகக் கடுமையான போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com