மகாராஷ்டிரத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரத்தில் ஹிங்கோலி பகுதியில் 3.5 ரிக்டர் அளவில் இன்று (திங்கள்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டது.
மகாராஷ்டிரத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியில் இன்று (நவம்பர் 20) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில்  மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் எனப் பதிவாகியுள்ளது.

இதனால் ஹிங்கோலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com