லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தன் காதலனை திருமணம் செய்துகொள்ள அவரின் பெற்றோரின் சம்மதத்தை பெற, செல்போன் உயர்கோபுரத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவரை, கடந்த சில வருடங்களாக ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தன் மனம் கவர்ந்த நபரை மணமுடிக்க அவர் விருப்பம்
கொண்டார். இதனையடுத்து, தனது காதலை அந்த இளைஞரின் வீட்டாருக்கு தெரியப்படுத்தி, அவர்களிடமிருந்து சம்மதம் பெறுவதற்காக அந்த பெண்மணி வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.
சேம்ரா ராஜா சுங்கச்சாவடி பகுதியில் அமைந்துள்ள 50 மீட்டர் உயர செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றுகொண்டு, சற்று வித்தியாசமான முறையில் தனது விருப்பத்தை காதலனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இதை வேடிக்கை பார்ப்பதற்கென அங்கு பெருங்கூட்டம் கூடிவிட்டது. இதன்காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.
அங்கு வேடிக்கை பார்க்க கூடியிருந்த சிலர், நடந்த சம்பவம் அனைத்தையும், தங்கள் கைப்பேசிகளில் விடியோவாக பதிவு செய்ததையும் காண முடிந்தது.
செல்போன் கோபுரத்தில் நின்றுகொண்டு, தன் காதலனை திருமணம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம் தெரிவிக்கும் வரை கீழே வரமாட்டேன் என பிடிவாதம் பிடித்த அந்த பெண்ணை, காவல்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அவரை கீழே இறங்கச் செய்ய முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், அவர் கீழே இறங்கி வர தொடர்ந்து மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, காவலர் ஒருவர் கோபுரத்தின் மீது ஏறிச் சென்று, அந்த பெண்ணை சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் சற்று வினோதமாக இருந்தாலும், ”காதல்” மனிதர்களை எந்தளவிற்கு பாடாய்ப்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாகவும் இச்சம்பவம் விளங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு நாள்! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் எச்சரித்தப் பிறகும்! கால்நடைத் துறை அமைச்சரின் ஆய்வு ரீல்ஸ் வைரல்! பாடல்தான் ஹைலைட்!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் காலவரையற்ற உண்ணாவிரதம்!

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த தவெக வழக்குரைஞர் ஞானசௌந்தரி நீக்கம்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



