தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குநருக்கு சுவேந்து அதிகாரி கடிதம்

கரோனா பெருந்தொற்றின்போது மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குநருக்கு மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். 

News image
Updated On :26 நவம்பர் 2023, 5:40 am

DIN

2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றின்போது பிபிஇ கிட் எனப்படும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை இயக்குநருக்கு மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கரோனா பெருந்தொற்றின்போது மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை இயக்குநர், வருமான வரித்துறை இயக்குநர் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் செயலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சுவேந்து அதிகாரி எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “கரோனா பெருந்தொற்று காலத்தில் அதனை எதிர்த்து போராடுவதற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கியது. அந்த நிதியில் மேற்கு வங்க சுகாதார அமைச்சகம் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்தது. அதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி விசாரணை அமைப்புகளுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன். மிக விரைவில் அமலாக்கத்துறை இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யும் எனத் தெரிகிறது.” என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020 நவம்பர் மாதம் வரை மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக சுவேந்து அதிகாரி பணியாற்றினார்.

2020 டிசம்பர் மாதம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, அதே மாதமே பாஜகவில் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.