

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று வழிபாடு செய்தார்.
ராகுல் இன்று காலை காலை 11:15 மணிக்கு விமான நிலையத்தில் தரையிறங்கினார். தனிப்பட்ட பயணமாக வந்ததாகவும், பொற்கோயிலில் தரிசனம் செய்வதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
2015-ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் அக்கட்சி எம்எல்ஏ சுக்பால் சிங் கைரா கைது செய்யப்பட்டது தொடர்பாக பஞ்சாப் காங்கிரசுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நேரத்தில் அவர் பஞ்சாபில் பயணம் செய்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கும் சில கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.