மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கணவரைக் கொன்று உடலை வீட்டிற்குள் மறைத்துவைத்த மனைவி: காட்டிக்கொடுத்தது எது? 

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் கணவரைக் கொன்று உடலை மூன்று நாள்களாக வீட்டில் மறைத்துவைத்துள்ள மனைவியை போலீஸார் கைது செய்தனர். 

News image
Updated On :11 அக்டோபர் 2023, 12:44 pm

DIN

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் கணவரைக் கொன்று உடலை மூன்று நாள்களாக வீட்டில் மறைத்துவைத்துள்ள மனைவியை போலீஸார் கைது செய்தனர். 

கியோஞ்சர் நகரக் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கொடிபாசா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை நடைபெற்ற நிலையில், உள்ளூர் மக்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும் போலீஸார் கிராமத்திற்கு விரைந்தனர். 

இதுகுறித்து நகரக் காவல் நிலைய ஆய்வாளர் சுனில் கூறுகையில், 

பழங்குடியின பெண்ணான சுனிதா ஜூங்காவுக்கு நான்கு குழந்தைகள். தன் கணவர் தூராவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 

மற்ற நாள்களை விட கடந்த ஞாயிறன்று சுனிதாவை அடித்தும், தகாத வார்த்தைகளால் திட்டியும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த சுனிதா தனது கணவரை இரும்பு கம்பியால் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் தூரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, கணவரின் உடலை அப்புறப்படுத்தாமல் வீட்டிலேயே மறைத்துவைத்துள்ளார். 

வீட்டிலிருந்து ஒருவித துர்நாற்றம் எழுந்ததையடுத்து, சந்தேகத்தின்பேரில் அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சுனிதாவை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.