தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு முறையாக காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் அக். 11 அன்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டுக்கு அக். 16 முதல் அக்.30-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இதையும் படிக்க | அயோத்தியில் புதிய பாபர் மசூதிக்கு நபிகள் நாயகம் பெயர்!
அதன்படி தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று (அக். 13) பிற்பகல் நடைபெற்றது.
இதில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்துக்கு வருகிற அக். 30 ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 3,000 கன அடி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.