தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

உத்தரகண்ட் பித்தோராகரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4  ஆகப் பதிவு

உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் அருகே திங்கள்கிழமை காலை 9.11 மணியளவில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள

News image
Updated On :16 அக்டோபர் 2023, 5:38 am

DIN

பித்தோராகர்: உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் அருகே திங்கள்கிழமை காலை 9.11 மணியளவில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் பித்தோரகத்தில் இருந்து வடகிழக்கே 48 கிலோமீட்டர் தொலைவில், 5 கிலோமீட்டர் ஆழத்திலும் இருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. 

முன்னதாக அக்டோபா் 5 ஆம் தேதி, உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை 3.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது மற்றும் நிலநடுக்கத்தின் ஆழம் 5 கிமீ ஆக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிா்வு மையம் தெரிவித்திருந்தது.

தொடா்ச்சியான பூகம்பங்களுக்குப் பிறகு, 6.2 ரிக்டா் அளவு கொண்ட வலுவான நிலநடுக்கம், நேபாளத்தை அதிா்ச்சிக்குள்ளாக்கியது. நில அதிா்வு தீவிரமான பகுதியில் இந்தியா அமைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.