மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ இன்று (அக். 16) நேரில் சந்தித்தார்.
துர்கா பூஜையையொட்டி கொல்கத்தாவுக்கு வருகைபுரிந்துள்ள அவருக்கு, மம்தா பானர்ஜி இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பளித்தார்.
பிரேசில் கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகைபுரிந்துள்ளார். ஆயுத பூஜையையொட்டி நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொலு பொம்மைகள் வைக்கப்பட்ட அரங்குகளைத் திறந்துவைத்தார். பரூய்பூர், நரேந்திரபூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரு பந்தல்களை ரொனால்டினோ இன்று மாலை திறந்து வைத்தார்.
முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவரின் இல்லத்திற்கு நேரில் சந்தித்தார். அவரை இந்திய பாரம்பரிய முறைப்படி மம்தா வரவேற்றார். அவருக்கு இனிப்புகளையும் வழங்கினார்.