சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நிதாரி தொடர் கொலை: குற்றவாளிகளின் மரண தண்டனை ரத்து; விடுதலை

நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்துள்ளது.

News image
சுரேந்திர கோஹ்லி, மொனீந்தர் சிங் பாந்தர்
Updated On :16 அக்டோபர் 2023, 9:54 am

DIN

நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகில் நிதாரி பகுதியிலுள்ள ஒரு பங்களாவில் கடந்த 2006-ஆம் ஆண்டு குழந்தைகள் உள்பட 19 பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணையில் சிறுமிகள், இளம்பெண் உள்ளிட்ட 19 பேரையும் பாலியல் பலாத்காரம் செய்து புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பங்களாவின் உரிமையாளர் மொனீந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் சுரேந்திர கோஹ்லி என்பரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு வழக்குகளில் மொனீந்தர் சிங்கிற்கும், கோஹ்லிக்கும் மரண தண்டனை வழங்கி கடந்த 2007-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், நிதாரி மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இருவரின் மரண தண்டனையும் ரத்து செய்து விடுதலை செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அஸ்வனி குமார் மிஸ்ரா மற்றும் எஸ்.எச்.ஏ.ரிஸ்வி ஆகியோர் அமர்வு, குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை சமர்பிக்காததால் அவர்களை விடுவிப்பதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.