இஸ்ரேலுக்கு இனி சீருடைகள் தைக்க மாட்டோம்: கேரள நிறுவனம் மறுப்பு!
கூத்துபறம்பில் அமைந்துள்ள மரியன் ஆடைகள் நிறுவனம் கடந்த 8 வருடங்களாக இஸ்ரேல் காவல் படைக்கு காவலர் சீருடைகள் தயாரித்து வழங்கி வந்தது.


கேரளா, கண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் மரியன் ஆடைகள் தயாரிப்பு என்கிற நிறுவனம், போர் முடியும் வரை இஸ்ரேல் காவல் படைக்கு தாங்கள் உடைகள் தைப்பதாக இல்லை என தற்காலிக நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
கூத்துபறம்பில் அமைந்துள்ள மரியன் ஆடைகள் நிறுவனம் கடந்த 8 வருடங்களாக இஸ்ரேல் காவல் படைக்கு, இஸ்ரேலில் உள்ள ஒரு முகமை வழியாக சீருடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்து வந்துள்ளது. ஆண்டுதோறும் 1 லட்சம் காவலர்களுக்கான சீருடைகள் இங்கிருந்து தயாரித்து அனுப்பப்படும்.
இந்த நிலையில், மனிதத்துவ அடிப்படையில் இஸ்ரேலுக்கு இனி இஸ்ரேலுக்கு உடைகள் தயாரிப்பதில்லை என முடிவெடுத்துள்ளது அந்நிறுவனம்.
இதையும் படிக்க: 2 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!
இது குறித்து மரியன் ஆடைகளின் நிர்வாக இயக்குநர் தாமஸ் ஒலிக்கல் பேசுகையில், “மீண்டும் அமைதி திரும்பும்வரை, இஸ்ரேலுக்கு உடைகள் தயாரிப்பதாக இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இது நிறுவனத்திற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்ற போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம் என்கிறார்கள் நிறுவனத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...