47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அன்னதான கூடத்தில் உணவருந்திய அமித் ஷா!

குஜராத்தில் தாயின் நினைவாக செயல்படும் அன்னதான கூடத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

News image
பொதுமக்களுடன் அமித் ஷா
Updated On :24 அக்டோபர் 2023, 2:12 pm

DIN

குஜராத்தில் தாயின் நினைவாக செயல்படும் அன்னதான கூடத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

குஜராத் மாநிலம் மன்சா பகுதியில் தனது தாயின் நினைவாக குசும்பென் அன்ன க்ஷேத்ரா என்ற பெயரில் அன்னதான கூடத்தை அமித் ஷா நடத்தி வருகிறார். இந்தக் கூடத்தில் நாள்தோறும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. 

மூன்று வேளையும் இலவசமாக ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வபோது இந்த அன்னதான கூடத்துக்கு  அமித் ஷா தனது குடும்பத்துடன் வருகைபுரிவது வழக்கம். அந்தவகையில், இன்று அன்னதான கூடத்துக்கு வந்த அமித் ஷா அங்கு வந்த மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். 

அமித் ஷாவின் தாயார் பெயர் குசும்பென் ஷா. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 2010ஆம் ஆண்டு காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.