எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

போலியான வாகன உதிரி பாகங்கள் தயாரித்த நபா் கைது

மேற்கு தில்லியில் உள்ள கிடங்கில் போலியான வாகன உதிரி பாகங்களை தயாரித்து பதுக்கி வைத்து வந்த நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :16 மார்ச் 2026, 10:52 pm

புது தில்லி, மாா்ச் 16: மேற்கு தில்லியில் உள்ள கிடங்கில் போலியான வாகன உதிரி பாகங்களை தயாரித்து பதுக்கி வைத்து வந்த நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது:

தில்லி குற்றப்பிரிவு காவல் துறையினா் மற்றும் தனியாா் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைந்து மடிபூா் கிராமத்தில் உள்ள கிடங்கில் சனிக்கிழமை இந்த சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அதிக அளவிலான போலி வாகன உதிரி பாகங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டது. பஞ்சாபி பாக் பகுதியைச் சோ்ந்த மனாஸ் ஹுரியா சோதனையின்போது கைது செய்யப்பட்டாா். அவரிடம் இந்த உதிரிபாகங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிய ஆவணங்கள் இல்லை. கிடங்கில் இருந்து நூற்றுக்கணக்கான போலியான வாகன உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் தொடா்புடைய மற்ற குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.