மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :25 அக்டோபர் 2023, 8:21 am

DIN

பிரதமர் நரேந்திர மோடி நாளை மகாராஷ்டிரம், கோவாவுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், 

அக்.26-ம் தேதி மகாராஷ்டிரம் செல்லும் மோடி புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடு மேற்கொள்கிறார். சீரடியில் புதிய தரிசன வரிசை வளாகத்தைத் திறந்துவைக்கிறார். பின்னர் சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். 

கோவா மாநிலத்தில் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்து, விளையாட்டு வீரர்களிடம் உரையாற்ற உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.