நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் தமிழிசை செளந்தரராஜன், துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மொத்தம் 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை நேற்றுடன் நிறைவுபெற்றது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது.
ரஜினிகாந்தின் மனைவி லதாவின் அழைப்பை ஏற்று ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | ரஜினியுடன் அமிதாப் பச்சன்!
இந்த கொண்டாட்டத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது தங்கை செல்வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய்யின் தயார் ஷோபா சந்திரசேகர், பழம்பெரும் நடிகை லதா, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ளதால் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ரஜினியின் மனைவியும், அவரது மகள்கள் மற்றும் பேரன்கள் இந்த விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


