எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தில்லியில் 565 கிலோ பட்டாசு பறிமுதல்!

தில்லி பாபர்பூர் பகுதியில் 565 கிலோ பட்டாசுகளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 2:18 pm

DIN

புதுதில்லி : தில்லி பாபர்பூர் பகுதியில் 565 கிலோ பட்டாசுகளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

இது குறித்து துணை காவல்துறை ஆணையர் ஜாய் திர்கி கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட லவ்காந்த் வட்ஸ்(35) அதிக அளவு பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து பாபர்பூர் பேருந்து நிலையம் அருகே சோதனை செய்ததில் லவ்காந்த் வட்ஸிடமிருந்து 565 கிலோ அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

எளிதாக பணம் சம்பாதிப்பதற்காக லவ்காந்த் வட்ஸ் இந்த குற்றத்தை செய்திருப்பதாக துணை காவல்துறை ஆணையர் ஜாய் திர்கி தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இவ்வளவு பெரிய அளவிலான பட்டாசுகளை சேமித்து வைப்பது அங்குள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

லவ்காந்த் வட்ஸ் மீது ஐபிசி 286 பிரிவின் கீழ் (வெடிபொருள் தொடர்பான கவனக்குறைவான நடத்தை) மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

2024 ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் வெடிக்க தில்லி அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.