திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு திரிணமூல் காங்கிரஸை மேற்கு வங்க மக்கள் நிராகரித்துவிட்டனர்: பாஜக 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! பேரவைத் தேர்தல் 2026! வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
/

தில்லியில் 565 கிலோ பட்டாசு பறிமுதல்!

தில்லி பாபர்பூர் பகுதியில் 565 கிலோ பட்டாசுகளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:48 pm IST

புதுதில்லி : தில்லி பாபர்பூர் பகுதியில் 565 கிலோ பட்டாசுகளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

இது குறித்து துணை காவல்துறை ஆணையர் ஜாய் திர்கி கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட லவ்காந்த் வட்ஸ்(35) அதிக அளவு பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து பாபர்பூர் பேருந்து நிலையம் அருகே சோதனை செய்ததில் லவ்காந்த் வட்ஸிடமிருந்து 565 கிலோ அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

எளிதாக பணம் சம்பாதிப்பதற்காக லவ்காந்த் வட்ஸ் இந்த குற்றத்தை செய்திருப்பதாக துணை காவல்துறை ஆணையர் ஜாய் திர்கி தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இவ்வளவு பெரிய அளவிலான பட்டாசுகளை சேமித்து வைப்பது அங்குள்ள மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

லவ்காந்த் வட்ஸ் மீது ஐபிசி 286 பிரிவின் கீழ் (வெடிபொருள் தொடர்பான கவனக்குறைவான நடத்தை) மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

2024 ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் வெடிக்க தில்லி அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.