
2024 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைப்பார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக தனது நாடாளுமன்றத் தொகுதியான லக்னௌவுக்கு வந்துள்ள ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் இதைப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என நான் மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகளும் தெரிவித்து வருகின்றனர்.
வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு மகரிஷி வால்மீகிக்கு மரியாதை செலுத்திய சிங், "மஹரிஷி வால்மீகியின் ராமர் ஒரு ராஜா மட்டுமல்ல, ஒரு லோக் நாயகர் என்பது உலகம் முழுவதும் தெரியும், நானும் நம்புகிறேன் என்றார்.
மேலும், வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.