ஜி-20 அமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு

அடுத்த ஜி-20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். 
ஜி-20 அமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு
Published on
Updated on
1 min read

அடுத்த ஜி-20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். 

தில்லியில் இந்தியா தலைமையில் ஜி-20 மாநாட்டின் 2ஆம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது, பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவிடம் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

முன்னதாக தில்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் ஜி-20 நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கி வரும் நிலையில், சிகர நிகழ்வான உச்சி மாநாடு தில்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதற்காக, உலகத் தலைவா்கள் தில்லியில் முகாமிட்டுள்ளனா். ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை, அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரேசில், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வகிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com